கொத்மலை – கெரண்டியெல்ல பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
கெரண்டியெல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த 44 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொத்மலை பிரதேச வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக விபத்து சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.