Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புறப்பட தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்; பறிபோனது இலங்கையரின் வேலைவாய்ப்பு!

புறப்பட தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்; பறிபோனது இலங்கையரின் வேலைவாய்ப்பு!

2 years ago
in முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 470, புறப்படுவதற்கு சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதம் காரணமாக கொரிய வேலைகளுக்குப் புறப்பட்ட தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல முடியாததால் தொழிலாளர்களை அனுப்ப முடியாமல் போனதுடன், அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானங்களின் இவ்வாறான தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக கொரிய வேலைகளுக்கு பணியாளர்களை அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

800ஆவது குழுவாக கொரிய வேலைகளுக்காகப் புறப்படும் நிலையில், இந்தக் குழுவை தென்கொரியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தயார் செய்திருந்தது.

கொரியாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காக 52 தொழிலாளர்கள் செல்லவிருந்த நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவையின் தாமதம் காரணமாக கொரிய மனிதவள திணைக்களம் அவர்களை நேற்று கொரியாவிற்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 23ஆம் திகதி சிறி லங்கன் ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் இவ்வாறு தாமதமாக வந்ததால், அந்த விமானத்தில் கொரியா செல்லவிருந்த இலங்கை ஊழியர்களை அந்நாட்டு மனிதவள திணைக்களம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டின் பேரில், ஜூன் 4ஆம் திகதி தொழிலாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அன்றும் இரண்டு மணித்தியாலங்கள் விமானம் தாமதமாகச் சென்றது.

இவ்வாறாக கொரிய வேலைகளுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் தாமதமாவது பாரிய நிலைமை எனவும் இதன் காரணமாக இலங்கை பணியாளர்களை கொரிய வேலைகளுக்கு அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது
செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

May 12, 2025
வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
செய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

May 12, 2025
Next Post
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள்; அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள்; அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.