Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை போராட்டத்தில் முறுகல் நிலை; ராஜ்குமார் ரஜீவ்காந் கைது!

திருகோணமலை போராட்டத்தில் முறுகல் நிலை; ராஜ்குமார் ரஜீவ்காந் கைது!

2 years ago
in செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில்குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று(30) காலை 10 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் வெலிக்கடை தியாகிகள் நினைவிடத்தை நோக்கி பேரணியாக சென்றது.

இதன்போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பேரணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் போர் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு கவனயீர்ப்பு இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து அவர்களோடு சேர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
Next Post
இலங்கையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.