Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம்; நாமல் தெரிவிப்பு!

நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம்; நாமல் தெரிவிப்பு!

9 months ago
in செய்திகள்

வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பியகம பகுதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்துவோம். தேசிய உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவோம். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவோம்.

தொழிலின்மை பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளின் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்துவோம். அதற்கான திட்டங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம். தேசிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்போம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பொய்யுரைக்க வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்போம், முடியாததை முடியாது என்போம். வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அப்போது அரசியல்வாதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போகும்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒருமித்த தன்மையில் உள்ளன. அதிகார பகிர்வு, தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தல், இறக்குமதி பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை நாங்கள் வகுக்க போவதில்லை என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வத்தளை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு
செய்திகள்

வத்தளை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

May 21, 2025
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

May 21, 2025
மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது
செய்திகள்

மறைந்த ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது

May 21, 2025
கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
செய்திகள்

கிழக்கு மாகாண வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

May 21, 2025
குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு
செய்திகள்

குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

May 21, 2025
நாடாளுமன்றில் அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு
செய்திகள்

நாடாளுமன்றில் அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு

May 21, 2025
Next Post
திருகோணமலையில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர் கைது!

திருகோணமலையில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.