Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஜித்தின் தோல்விக்கு ஹக்கீமே காரணமாக இருப்பார்!

சஜித்தின் தோல்விக்கு ஹக்கீமே காரணமாக இருப்பார்!

9 months ago
in அரசியல், செய்திகள்

எதிர்வரும் 21ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தோல்வியை தழுவ போகிறார் என்பதை தெரிந்து கொள்ள பல நேரங்களோ அல்லது பல காரணங்களோ தேவையில்லை. ஒரே ஒரு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எப்போது சஜித்துக்கு ஆதரவாக நின்று அவரை வெல்ல வைக்கபோகிறேன் என்று கூறினாரோ அந்த நிமிடமே அவர் தோற்று முடிந்தது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

ஏனென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடைய தலைவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அந்த வேட்பாளர் படுதோல்வியையே சந்தித்து வந்துள்ளார்.

தபால் வாக்களிப்புக்கு பின்னர் வந்து ஆதரவளித்த நல்லாட்சி அரசை தவிர மற்ற எல்லா அரசாங்கமும் தோற்றே இருக்கிறது.

மக்கள் ஜனாதிபதி ரணிலின் பக்கம் இருப்பதனால் இந்த முறை சஜித் பிரேமதாசா அவர்கள் தோற்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நாட்டை சுபிட்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமா அல்லது வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமா? என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்த சம்மாந்துறை மண்ணில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த சம்மாந்துறை மக்கள் இந்த கூட்டம் நடக்கும் பொது மைதானத்தை மறக்க மாட்டார்கள். உங்களுக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும். கேஸ் சிலிண்டர் எடுப்பதற்காக வயதானவர்கள் மயங்கி விழுந்த சம்பவங்கள் சம்மாந்துறையில் மட்டுமல்ல நாட்டின் பல பாகங்களிலும் பதிவாகியது. இதனை நினைவில் கொண்டு நாங்கள் வாக்களிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் இந்நாட்டை சுபிட்சமான நிலைக்கு கொண்டு செல்லும்.

சம்மாந்துறையில் 50,000 மேற்பட்ட வாக்குகள், எத்தனையோ விளையாட்டு கழகங்கள், எத்தனையோ விளையாட்டு வீரர்கள், பொது அமைப்புக்கள் இருந்தாலும் ஒரு பொது விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் இந்த மைதானத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஒழுங்கான எதிர்காலத்தை 21 ஆம் தேதி வெற்றிக்குப் பின் ஜனாதிபதி ரணிலினால் சாத்தியமாகும் என்பதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
காணொளிகள்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2025
மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்
செய்திகள்

மே18 நினைவு நாளை வெற்றி நாளாக பிரகடனப்படுத்தும் நாமல்

May 18, 2025
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும்; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
Next Post
மட்டக்களப்பில் சுமூகமாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கள்!

மட்டக்களப்பில் சுமூகமாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.