Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யார் எதிரியென்று தெரியாத தமிழினம்! (கட்டுரை)

யார் எதிரியென்று தெரியாத தமிழினம்! (கட்டுரை)

3 years ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள்

தமிழ்த் தேசிய அரசியல், முன்னேற்றங்கள் எதுவுமின்றி வழமைபோலவே ஊர்ந்து செல்கின்றது.
ஊர்ந்து செல்கின்றதென்று கூறுவதுதான் சரியான சொல்லாகும் – அந்தளவுக்கு நிலைமைகள் மோசமடைந்தே செல்கின்றன.

யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களாகிவிட்டன. இந்தக் காலத்தில் பயன்படுத்திய சொற்களும் பரப்பப்பட்ட நம்பிக்கைகளும் அலாதியானவை – ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளால் ஓர் அடிகூட முன்னோக்கி நகர முடியவில்லை.

சர்வதேச அழுத்தங்களை அதிகரியுங்கள் – தமிழர்மீது கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றதென்று – ஒப்பாரி வைத்த போதிலும் உலகத்தின் கடைக்கண் பார்வை தமிழர்மீது திரும்பவில்லை.

இதுவரையில் திரும்பாத அவர்களின் பார்வை இனியும் திரும்புமென்று வாதிடுவதில் அர்த்தமில்லை.
ஏன் இவ்வாறானதொரு நிலையென்று கேள்வி எழுப்பினால் ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது குற்றம் சாட்டுவதே தமிழர் பக்க வாதமாக இருக்கின்றது.

உண்மையில், மக்களின் நோக்கில் அனைவருமே குற்றவாளிகள்தான்.
ஏனெனில், விடயங்களை சாதகமாகவும் தந்திரோபாயமாகவும் கட்சிகள் கையாளவில்லை.
முக்கியமாக கடந்த 14 வருடங்களில் ஆகக் குறைந்தது தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்துமாக ஒன்றிணைந்து தேர்தல் அரசியலுக்கு அப்பாலான ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டியெழுப்ப முடியவில்லை.
உண்மையில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக எழுச்சியுறுமாக இருந்தால் இராஜதந்திர சமூகம் தமிழர் பக்கம் திரும்புவதை தவிர்க்க முடியாது. ஏனெனில், இலங்கையில் இரண்டு அரசியல் முகாம்கள் இருக்கின்றன.

ஒன்று சிங்கள அரசியல் முகாம் அடுத்தது, தமிழ் அரசியல் முகாம்.
இந்த அடிப்படையில்தான், மேற்குலகமும் இந்தியாவும் இலங்கையை கையாண்டு வருகின்றன.
ஆனால், இந்த இரண்டு முகாம்களில் ஒன்றான தமிழர்கள் மிகவும் பலவீனமானதோர் அரசியலை முன்னெடுத்து வருவதனால் மேற்குலகமும் இந்தியாவும் தமிழர் முகாமை ஒரு தரப்பாக கையாளவில்லை – கையாள்வதற்கு விரும்பவுமில்லை.

1980களுக்கு பின்னரான சூழலில், இந்தியா தமிழர்களை ஒரு தனி முகாமாகவே கையாண்டது.
அதனடிப்படைலேயே இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாட்டை முன்னெடுத்தது.
ஆனால், இன்றோ தமிழர்களை வெறுமனே சிறுபான்மை என்னும் நிலையிலேயே கையாள்கின்றனர்.
இந்தியாவின் நிலைப்பாடும் மேற்குலகின் நிலைப்பாடும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றது.
இதற்கு அவர்களை குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை. ஏனெனில், தங்களை ஒரு தரப்பாக நிரூபிக்க வேண்டியது தமிழர்களின் பணியாகும்.

தமிழர்கள் தங்களின் பணியை சரியாக முன்னெடுக்காதபோது மற்றவர்கள் எதற்காக தமிழர்களை நோக்கி திரும்ப வேண்டும்? ஏனெனில், இது நலன்சார் அரசியல் உலகாகும்.
தமிழர்கள் தங்களை ஓர் அரசியல் பலமுள்ள மையமாக திரட்டிக்கொள்ளாத வரையில், தமிழர்களுக்கென்று தனியான அரசியல் இருக்கப் போவதில்லை.
அவ்வப்போது மனித உரிமைகள், ஜனநாயகம், 13ஆவது திருத்தச்சட்டம் – இவ்வாறான சொற்களோடு மட்டுமே தமிழரின் அரசியல் சுருங்கிப் போகப்போகின்றது.

இதற்கப்பால் எவருமே தமிழர் மீது, பிரத்தியேக கரிசனைகொண்டு செயலாற்றப் போவதில்லை.
இந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டுமாயின், தமிழர் தரப்புகள் ஓர் ஐக்கிய முன்னணியாக மாறவேண்டும்.

இதற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அனைவரையும் தமிழர் சமூகம் தேர்தல் மூலம் தோற்கடிக்க வேண்டும்.
ஐக்கிய முன்னணி உபாயத்தை சீர்குலைத்து தாங்கள் மட்டும் புனிதர்களென்று கூற எவரெல்லாம் முயற்சிக்கின்றார்களோ அவர்களே தமிழ் மக்களின் பரம எதிரிகளாவர்.

தொடர்புடையசெய்திகள்

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி
அரசியல்

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

June 5, 2026
தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்
அரசியல்

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை
அரசியல்

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

June 3, 2026
பணக்கார நாடும் அழகான வாழ்க்கையும் வேண்டுமென்றால் இன்னும் 20 வருடங்களுக்கு எங்களுடன் பொறுமையாக இருங்கள்; NPP எம்பி
அரசியல்

பணக்கார நாடும் அழகான வாழ்க்கையும் வேண்டுமென்றால் இன்னும் 20 வருடங்களுக்கு எங்களுடன் பொறுமையாக இருங்கள்; NPP எம்பி

June 1, 2026
பசிலுக்கு உடல் வருத்தம்-அதனால் இப்போதைக்கு நாட்டிற்கு வரமாட்டார்; லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்
அரசியல்

பசிலுக்கு உடல் வருத்தம்-அதனால் இப்போதைக்கு நாட்டிற்கு வரமாட்டார்; லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்

June 1, 2026
Next Post
இலட்சக்கணக்கில் சிக்கிய போதை மாத்திரைகள்; ஒருவர் கைது!

இலட்சக்கணக்கில் சிக்கிய போதை மாத்திரைகள்; ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.