காவல்துறை அதிகாரிகளுக்கு மிகச் சிறந்த வாழ்வாதாரம் கிட்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச ஊழியர்களுக்கு நல்லதொரு சம்பளத்தையும் நாட்டு மக்களுக்கு சிறந்த அரச சேவையினையும் வழங்க என்னால் முடியும்.
எனது எதிர்தரப்பு வேட்பாளர்கள் நாட்டை பின் நோக்கி கொண்டு செல்கிறார்கள்.
அவர்களின் பொறுப்பற்ற கொள்கைகளினால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது.
அதனால் அரச சேவையும் பொருளாதாரமும் சரிவடையும்.
2022 ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த நெருக்கடியான நிலைமைகள் மீண்டும் உருவாகக்கூடிய செயற்பாடுகளை செய்யக்கூடாது.
உங்கள் தெரிவு சரியானதாக அமைய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.








