Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதியோர் கொடுப்பனவில் மோசடி; ஐவர் பணியிடை நீக்கம்!

முதியோர் கொடுப்பனவில் மோசடி; ஐவர் பணியிடை நீக்கம்!

2 years ago
in செய்திகள்

புத்தளம் – ஆனமடுவ பிரதேச செயகத்தில் முதியோர் கொடுப்பனவு விநியோகத்தில இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அங்கு கடமையாற்றிய பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கணக்காய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பிரதம நிர்வாக அதிகாரி உட்பட ஐவரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதியோர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முதியோர் கொடுப்பனவில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் நிதி முகாமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கொடுப்பனவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் உட்பட பல கிராம உத்தியோகத்தர்கள் இதுதொடர்பில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக, புத்தளம் மாவட்ட செயலாளருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் முறைப்பாடுகள் கிடைத்ததோடு, இதுதொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினரிடம் மாவட்ட செயலாளர் ஒப்படைத்துள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான கணக்காய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட கணக்காய்வு பிரிவு அதிகாரிகள், ஆனமடுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் களப் பணிகளை மேற்கொண்டு, அங்கு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு, மாவட்ட செயலாளரிடம் முழுமையான அறிக்கையை வழங்கியிருந்தனர்.

அந்த அறிக்கையினை கவனத்தில் கொண்ட மாவட்டச் செயலாளர் இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இந்த நிதி மோசடிகள் தொடர்பான மேலதிக சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஐவரையும் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்ய புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.