Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் போலி நாணயத்தாள்கள்; பொலிஸார் திடீர் சுற்றி வளைப்பு!

நாட்டில் போலி நாணயத்தாள்கள்; பொலிஸார் திடீர் சுற்றி வளைப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

ஜந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள், 23 உடன், மூன்று சந்தேக நபர்களை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக்குரஸ்ஸ நகரில் போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு அக்குரஸ்ஸ மரம பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து ஜந்தாயிரம் ரூபா போலி நாணையத்தாள்கள், 3 கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் போலி நாணயத்தாள்களை சந்தேக நபருக்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலும் பணத்தை கொண்டு வருமாறு அந்த நபர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைபேசி அழைப்பின் பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 20 போலி நாணயத்தாள்களை கைமாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அஹங்கம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 33 மற்றும் 25 வயதுடைய தொழிலாளர்கள் எனவும்,

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை மற்றும் பணப் புழக்கம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகவிட்ட பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில், போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

500 ரூபாயின் 12 போலி நாணயத்தாள்கள், மடிக்கணினி, பணம் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
நாட்டில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள்!

நாட்டில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.