Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

3 years ago
in முக்கிய செய்திகள்

கொழும்பை அண்டிய பிரதேசத்தில் முகமூடி வேடமிட்டு வந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி மற்றும் வான் ஒன்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, அவர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பன்னிப்பிட்டிய மஹல்வராவ சந்திக்கு அருகில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி சாரதியிடம் மகமன்ன பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.

அதன்படி முச்சக்கரவண்டி சாரதி குறித்த நபரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மாகம்மன பிரதேசத்தில் உள்ள பக்க வீதியொன்றில் பயணித்த போது சந்தேகத்தின் காரணமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு வந்த ஆயுதம் தாங்கிய கும்பல் முச்சக்கரவண்டி சாரதியை தாக்கிவிட்டு 2500 ரூபா, கைத்தொலைபேசி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபர்கள் இங்கிரிய பிரதேசத்தில் வான் ஒன்றினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வான் ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

வான் சாரதி தனது நண்பரை சந்திப்பதற்காக இங்கிரிக்கு வந்த போது சந்தேகநபர்கள் வானை மறித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வந்த முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஓடியதுடன், வீதியகொடையில் வீதியொன்றில் விடப்பட்ட நிலையில் கொள்ளையிடப்பட்ட வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, கொள்ளைக் கும்பலைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், வாகனம் வைத்திருப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!
செய்திகள்

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

June 13, 2026
Next Post
திருமலையில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி மூவர் படுகாயம்!

திருமலையில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி மூவர் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.