Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மொட்டு சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தயாராகும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி!

மொட்டு சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தயாராகும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி!

8 months ago
in அரசியல், செய்திகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம்.

இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியின் வெற்றியை உறுதி செய்யவும் பலமான அணிகளை உருவாக்கி வருகிறோம்.

மேலும், கட்சியை விட்டு வெளியேறி சென்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேட்புமனுக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், சில உறுப்பினர்களை கட்சிக்குள் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!
செய்திகள்

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

June 12, 2025
மங்கோலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

மங்கோலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்

June 12, 2025
விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை
செய்திகள்

விடுவிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

June 12, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் பெறுமதியான 2077 திட்டங்களுக்கு அனுமதி: மட்டு அபிவிருத்தி குழ தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் பெறுமதியான 2077 திட்டங்களுக்கு அனுமதி: மட்டு அபிவிருத்தி குழ தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி

June 12, 2025
மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்த நபர் கைது
செய்திகள்

மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்த நபர் கைது

June 12, 2025
விளக்கமறியலில் உள்ள துஷார உபுல்தெனியவுக்கு சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை?
செய்திகள்

விளக்கமறியலில் உள்ள துஷார உபுல்தெனியவுக்கு சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை?

June 12, 2025
Next Post
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் பலி!

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.