Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைரவிழாவினை முன்னிட்டு, “ஆலங்குளம் ” என்னும் சிறப்பு மலர் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வானது பாடசாலை ஆரம்பித்து 60 ஆண்டுகளின் பின் அதிபர் இ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பாடசாலை வராலாற்றில் தடம்பதித்த முதன் நிகழ்வாகும்.

இன்றைய (20) நிகழ்வின்போது அதிதிகள் அனைவரும் மலர் மாலை அணிவித்து மாணவர்களின் கோலாட்ட நிகழ்வுடன் வரவேற்கப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.இதன்போது அதிபர் பாடசாலையின் வராலாறு, மாணவர்களின் கல்வி வளர்சி தொடர்பாகவும் மற்றும் நிகழ்வானது திறன்பட நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியை தமது தலைமை உரையின்போது தெரிவித்தார்.

இதன் பின்னர் கௌரவ அதிதிகளினால் ஆலங்குளம் சிறப்பு மலர் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.கற்றல் நடவடிக்கைகளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இதழாசிரியர்,பெற்றோர்கள் மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி எம்.ஏ.றிஸ்மியாபாணு, பிரதிக் கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.நேசகஜேந்திரன், இந்து கலாச்சார உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், ஓய்வு பெற்ற அதிபர் நா.காளிராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களும், அண்பிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதற்கான நிதி அனுசரனையை கிண்ணியா ஆலங்கேணியில் அமைந்துள்ள அரிஓம் லக்ஸ்மி நாராயணன் நற்பணி மன்ற ஸ்தாபகரான சிவத்திரு.ரெ.பன்னீர்செல்வம் வழங்கியிருந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.