மட்டக்களப்பு, வாகரை அருகே பனிச்சங்கேணி பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்றைய(26) முன்னிரவில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களே பனிச்சங்கேணி பாலத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த வாலிபர்கள் இருவரும் ஓட்டமாவடி பதுறியா நகரைச்சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்துள்ளது.
தற்போது உயிரிழந்த வாலிபர்களின் சடலங்கள் வாகரை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.