Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை மீட்டெடுக்கும் வரை எமது ஆட்சியை அவ்வளவு எளிதில் கவிழ்த்து விட முடியாது; ஜனாதிபதி

நாட்டை மீட்டெடுக்கும் வரை எமது ஆட்சியை அவ்வளவு எளிதில் கவிழ்த்து விட முடியாது; ஜனாதிபதி

7 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக் கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்து விட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை. எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத் தும் பொய்யென உறுதியாகியுள்ளது. எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர் பார்த்துக்கொண்டுள்ளனர்.

அறுகம்குடா சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாடாளுமன்றில் அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு
செய்திகள்

நாடாளுமன்றில் அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு

May 21, 2025
சபையில் வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா – சந்திரசேகர்
அரசியல்

சபையில் வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா – சந்திரசேகர்

May 21, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது
செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது

May 21, 2025
ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஞானசார தேரர் தெரிவிப்பு
செய்திகள்

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஞானசார தேரர் தெரிவிப்பு

May 21, 2025
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் 7 பேர் காயம்
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் 7 பேர் காயம்

May 21, 2025
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

May 21, 2025
Next Post
கன்றுக்குட்டியை வெட்டிய திருடர்கள்; வெல்லாவெளி பகுதியில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

கன்றுக்குட்டியை வெட்டிய திருடர்கள்; வெல்லாவெளி பகுதியில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.