Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணிப்பதிவு சிங்கள மொழியிலா? ; காணிப்பதிவாளர் அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் குழு விஜயம்

காணிப்பதிவு சிங்கள மொழியிலா? ; காணிப்பதிவாளர் அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் குழு விஜயம்

2 years ago
in செய்திகள்

கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த வாரம்காணி உரித்து பதிவு தொடர்பில் சிங்கள மொழி மட்டும் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இது தொடர்பில் ஊடக பணியாளர்கள் குழுவொன்று கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

அதன் போது அவர்கள் காணி உரித்து பதிவு சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சிங்கள மொழிக்கு பதிலாக தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் அனைத்து விடயங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணி உரித்து பதிவு மேற்கொள்வது சட்டத்திற்கு அமைவாக பதிவு செய்து கொள்ளும் மாதிரி விண்ணப்பத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து சட்டத்தரணி ஊடாக உரித்து தொடர்பிலான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினர்.

பின்னர் காணிப் பதிவாளர் அலுவலகத்தின் ஊடாக இந்த விண்ணப்பங்களை சரியாக காணப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்து பதிவு செய்து கொள்ள முடியும் என விளக்கமளித்தனர்.

இணைய வழியில் இந்த ஆவணத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியாதவர்கள் மட்டும் காணி பதிவாளர் காரியாலயத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

இதேவேளை மாதிரி விண்ணப்ப படிவத்தின் ஏதாவது ஓர் விடயம் மாற்றப்படக்கூடாது என 1998 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க உரிமை பதிவு சட்டத்திற்கு பிரகாரம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சட்டத்தரணியினால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால் அதனை திருத்தி காணிப்பதிவு காரியாலயத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் காணிப்பதிவினை மேற்கொள்ள முடியும் என கம்பஹா காணிப்பதிவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

வாக்காளர்களின் விரல்களில் அழியாத வண்ணம் பூசுவதை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

June 23, 2026
எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
Next Post
ஹோட்டலுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இத்தாலிய பிரஜை

ஹோட்டலுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இத்தாலிய பிரஜை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.