மொனராகல, மெதகம பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் மெதகம பகுதியை சேர்ந்த சுனில் திசாநாயக்க என்ற 49 வயதுடைய தந்தையாவார்.
கடந்த 14 ஆம் திகதி தனது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

100 மீட்டர் தூரம் வரை நடந்து சென்றபோது, அவர் அவரது பின்னால் சென்று அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் நிரோஷா பிரியதர்ஷனி என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாவார்.

தனது மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர், மனைவியை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த நிலையில் நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணை பிபில நீதவான் மகேஷானி அமுனுகம நடத்தியுள்ளதுடன் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஏ.சி. லக்மாலி மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.