குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சகோதரியைப் பார்க்கச் சென்ற போது மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து சாப்பாட்டு பொதி ஒன்றினை வாங்கியுள்ளார்.
இந்த சாப்பாட்டினை குறித்த நோயாளி உண்ணும் போது பொதியில் இறந்த நத்தை ஓட்டுடன் இருப்பதை கண்டுள்ளதுடன் குறித்த நோயாளிக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டுள்ளது.
இது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தபட்டதுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளரை கடுமையாக எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.