Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்; தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்; தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பாளர்களை எச்சரித்துள்ளார்.

இன்று (08) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

அமைதி காலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் உங்களால் நடத்த முடியாது. வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கவும் முடியாது.

பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் இயலுமையும் இல்லை. அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம்.

எனவே அமைதிகாலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று சமூக ஊடக பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமைதி காலத்தில் ஏதேனும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக அந்த பதிவுகளை நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தான் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து; 15 குழந்தைகள் பலி
உலக செய்திகள்

பாகிஸ்தான் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயங்கரத் தீ விபத்து; 15 குழந்தைகள் பலி

August 26, 2026
மட்டு தாழங்குடா வீடு ஒன்றின் முற்றத்தில் சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!
காணொளிகள்

மட்டு தாழங்குடா வீடு ஒன்றின் முற்றத்தில் சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!

August 26, 2026
NIC இல்லையென அழைத்து சென்று பொலிஸ் தனது தந்தையை தாக்கியதாக மகன் குற்றச்சாட்டு-குடித்துவிட்டு பிரச்சனை செய்ததாக பொலிஸ் விளக்கம்
காணொளிகள்

NIC இல்லையென அழைத்து சென்று பொலிஸ் தனது தந்தையை தாக்கியதாக மகன் குற்றச்சாட்டு-குடித்துவிட்டு பிரச்சனை செய்ததாக பொலிஸ் விளக்கம்

August 26, 2026
ஈரானிய கப்பலை கண்டால் தாக்கி அழிப்போம்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானிய கப்பலை கண்டால் தாக்கி அழிப்போம்; ட்ரம்ப்

August 26, 2026
பெட்டாவில் துப்பவும் முடியாது, கழிக்கவும் முடியாது; 1,000 பேருக்கு நூதன தண்டனை
செய்திகள்

பெட்டாவில் துப்பவும் முடியாது, கழிக்கவும் முடியாது; 1,000 பேருக்கு நூதன தண்டனை

August 26, 2026
புனித மீலாதுன் நபி தினம் இன்றாகும்
செய்திகள்

புனித மீலாதுன் நபி தினம் இன்றாகும்

August 26, 2026
Next Post
21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.