Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவினால் ஏற்பட்டுள்ள ஆபத்து

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

பல்வேறு பயிற்சி வகுப்புகளின் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலம் மாணவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் தகாத புகைப்படங்களை இணைத்து மாணவர்களை அச்சுறுத்துவதாக தெரியவந்துள்ளது.

வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இவ்வாறான ஆபத்தான நபர்கள் பதிவிறக்கம் செய்து, அந்த புகைப்படங்களை எடிட் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை உரிமையாளருக்கு அனுப்பி, அந்த புகைப்படம் தவறான இணையதளங்களில் விநியோகிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

அவர்களை பயமுறுத்துவதுடன், அதை அகற்ற விரும்பினால், இதுபோன்ற புகைப்படங்களை அகற்றும் சேவை மூலம் செய்யலாம் எனவும் அவர்களுக்குத் தெரிவித்து, தாங்கள் கூறுவதை போன்று செயல்பட அறிவுறுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த புகைப்படத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உண்மையான தகாத புகைப்படத்தைப் பதிவேற்றுமாறும் மோசடியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்தத் தொடர் வழிமுறைகளைப் பின்பற்றும் மாணவர்கள் தங்களின் உண்மையான அந்தரங்க புகைப்படத்தை இணைப்புகள் மூலம் அனுப்பத் தூண்டப்படுகிறார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகவும், உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இவ்வாறான சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
Next Post
எதிர்க்கட்சி ஆசனத்தில் அரச தரப்பு எம்.பிக்கள்!

எதிர்க்கட்சி ஆசனத்தில் அரச தரப்பு எம்.பிக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.