Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள்

பரஸ்பர இணக்கப்பாட்டுடன் அடையாளங்காணப்பட்ட இடங்களிலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடல் மார்க்கமான பயணிகள் போக்குவரத்து குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்திய – இலங்கை கூட்டுக் குழுவின் மெய்நிகர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சின் மேலதிக செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா, துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவச்சந்திர ஆகியோரின் தலைமையில் இந்த இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

கப்பல் சேவைகளை மீள ஆரம்பிப்பதால் பிராந்திய ரீதியான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த சேவைகள் மேம்படுத்தப்படுவதுடன் மக்கள் – மக்கள் தொடர்புகளும் வலுவடையுமென இருதரப்பினரும் இணங்கியுள்ளனர்.

வெகுவிரைவில் கப்பல் சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கான பரஸ்பர ஒத்துழைப்புக்கான பல்வேறு காரணிகளையும் இந்த கூட்டுக்குழு அடையாளம்கண்டுள்ள அதேவேளை பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.

2011 இல் கைச்சாத்திடப்பட்ட கடல் மார்க்கமான பயணிகள் போக்குவரத்து குறித்த இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய இலங்கை அரசாங்கங்களால் இந்த கூட்டுக்குழு அண்மையில் மறுசீரமைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை
செய்திகள்

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை

June 6, 2025
சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்
செய்திகள்

சிங்கப்பூருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

June 6, 2025
துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
Next Post
200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.