Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் அழைப்பு

அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் அழைப்பு

6 months ago
in செய்திகள்

பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகன் நேற்று (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலே​யே இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிதியமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பை நன்றியுடன் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

அரசியல் மாற்றங்களின் போது அரச ஊழியர்களை முன்னைய செயற்பாடுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்த வரலாறுகள் உண்டு எனவும் ஆனால் இனிவரும் காலங்களில் அரச ஊழியர்கள் ஆற்றப்போகும் பணியே அவர்களை மதிப்பீடு செய்யும் காரணியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக முன்னிலையாவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பம் இல்லை என்றும், அந்த நிலைப்பாட்டினை மாற்றுவது கடினமானது என்ற போதிலும், தம்மைப் பற்றி ஏதேனும் மோசமான விம்பம் இருக்குமாயின், புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த அனைத்து அதிகாரிகளும் தம்மைப் பற்றிய விம்பங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஊடகங்களுக்கு முன்பாக அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும், சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக ஒன்றுபடுமாறு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!
செய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!

May 28, 2025
யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்

May 28, 2025
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

May 28, 2025
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி
செய்திகள்

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி

May 28, 2025
சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி
செய்திகள்

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

May 28, 2025
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

May 28, 2025
Next Post
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.