Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் பேண முடிவு

6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் பேண முடிவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நீர் மின் உற்பத்தி உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ஏன் மக்களுக்கு அதன் பலனை பெற்றுத் தர முடியாது என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ​​கடந்த ஒக்டோபரில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட இருந்த போதிலும், அது டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியில், இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை 6% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.

தற்போதுள்ள நிலவரத்தை பொருத்து மின்கட்டணத்தை அதிக சதவீதத்தில் குறைக்கலாம் என்று குறிப்பிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த முன்மொழிவை நிராகரித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தாமல் தொடர்ந்தும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று மீண்டும் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தது.

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வினவிய போது, மின்சாரக் கட்டணத்தை திருத்தினால் 1.02% என்ற குறைந்த சதவீதத்தில் செய்யலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை திருத்தாமல் இருப்பதற்கு மேற்கொண்ட யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில் பெய்த கனமழையால் நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்திருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி நீர்மின் உற்பத்தி 56% ஆக காணப்பட்டது.

எவ்வாறாயினும், மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் வருடம் ஜனவரி 3ஆம் வாரத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
Next Post
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.