Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எங்களது உறவுகளைக்கொண்டுசென்றவர்களை எங்களுக்கு தெரியும். சாட்சியங்களாகவே பல வருடங்களாக வீதிகளில் நின்று போராடிவருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு வடகிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்றைய தினம் (10) மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவிலிருந்து, காந்தி பூங்காவரையில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது.

இந்த பேரணியானது காந்திபூங்காவினை வந்தடைந்ததும் அங்கு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய இந்த போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளக பொறிமுறைவேண்டாம், சர்வதேச நீதிவேண்டும், எமது பிள்ளைகள் எங்கே எங்கே, திசைகாட்டி அரசே திசைமாறாதே, சர்வதேச நீதியைப்பெற்றுக்கொடு, போர்க்குற்றவாளிகளை விசாரணைசெய், எமது உறவுகளுக்கு நீதிவேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்காதே போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது தண்டனையின்மைக்கு மத்தியிலான உறுதி வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட அமைப்பான உண்மைக்கும் நீதிக்குமான போராட்டம் என்னும் தலைப்பிலான நூல் ஒன்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் சர்வதேச சமூகத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையும் இதன்போது அமைப்பின் செயலாளர் திருமதி சுகந்தியினால் வாசிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், போராட்டத்தில் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது பெருளமவான பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்ததுடன் புலனாய்வாளர்களினால் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
காணாமல்ப்போயுள்ள சபாநாயகரின் கலாநிதி பட்டம்

காணாமல்ப்போயுள்ள சபாநாயகரின் கலாநிதி பட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.