Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எந்த விசாரணை அறிக்கைகளிலும் குறிப்பிடப்படவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் பிரதான பொறுப்புதாரிகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நாளை இந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி எதை சொல்ல போகிறார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 தினத்துக்கு முன்னர் பகிரங்கப்படுத்துவதாக வாக்குறுதியளித்தார்.

குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை அறிவிக்காவிடின் ஏப்ரல் 21 தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய மட்டத்தில் 7 விசாரணைகளும், சர்வதேச மட்டத்தில் 4 விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த விசாரணைகளிலும் பிரதான சூத்திரதாரி யாரென்பது குறிப்பிடப்படவில்லை. இந்த விசாரணைகளில் குறிப்பிடப்படாத விடயங்களையா ஜனாதிபதி இவ்விரு தினங்களில் குறிப்பிட போகிறார் என்பதை பார்த்துக்கொண்டிக்கிறோம்.

ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அது பேராயரை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.அது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும்.

குண்டுத்தாக்கு

தல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதி சஹ்ரானை கொண்டு நௌபர் மௌலவி இந்த தாக்குதல்களை நடத்தினார் என்பதை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பொறுப்புடன் பாராளுமன்றத்துக்கு அறிவித்திருந்தேன்.

நியூசிலாந்து நாட்டில் பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தான் நௌபர் மௌலவியின் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும், மேற்கத்தேயர்கள் இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் கூட்டாக ஒன்றிணைந்து இந்த விடயத்தை குறிப்பிட்டு சுய உடன்படிக்கை செய்துக் கொண்டுள்ளனர். இவ்விடயம் விசாரணைகளில் வெளிவந்தன.

இவ்வாறான நிலையில் குண்டுத்தாக்குதல்கள் விவகாரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பேராயர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நீதியரசர் விஜித் மலல்கொட விசாரணை ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை, தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, இமாம் அறிக்கை மற்றும் அல்விஸ் அறிக்கை ஆகியன உரிய தரப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த அறிக்கையிலும் ‘அரசியல் நோக்கத்துக்காக குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக’குறிப்பிடப்படவில்லை.அனைத்து அறிக்கைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தேவைக்காக நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்தனர். மேற்கொள்ளப்பட்ட 4 சர்வதேச மட்ட விசாரணைகளிலும் இது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. நௌபர் மௌலவி, மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஆகிய மூவரை பயங்கரவாதிகளாக குறிப்பிட்டு அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத புதிய விடயத்தை ஜனாதிபதி குறிப்பிடுவதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.