முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய அகதிகள் கப்பல் ஒன்று கரையொதுக்கிய சம்பவம் இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
குறித்த கப்பல் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்துள்ளது.
குறித்த கப்பலில் 25ற்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்டு, கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள் மற்றும் உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கி வருக்கின்றனர்.
அதில் சிலர் மயக்க நிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



