Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

1 year ago
in செய்திகள்

காலி, பத்தேகம பகுதியில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதான தனது காதலியை பொய்யான காரணத்தை கூறி விளையாடுவதற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் ஈடுபட்ட 23 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் சனத் நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி காலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் பத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், மறுநாள் காலை சிறுமி பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பாழடைந்த வீடொன்றில் தனியாக தங்கியிருந்தாக தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தகவலில் உண்மையில்லை என சந்தேகித்த பொலிஸார் அவர் இரவைக் கழித்ததாகக் கூறப்படும் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு யாரும் தங்கியதற்கான அறிகுறிகளைக் காணாததால், அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தான் கூறியது பொய் எனவும் காதலனின் வேண்டுகோளின் பேரில் தான் சந்திக்க சென்றதாகவும் அங்கு கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக காதலனுடன் உறவில் இருந்ததால் கடந்த 18ம் திகதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தன்னை ஏமாற்றி அவரது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காதலனின் வற்புறுத்தல் காரணமாக தான் பொய் சொன்னதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான காதலன், பத்தேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
பண்டிகைக் காலங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

பண்டிகைக் காலங்களில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.