Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்; இராமநாதன் அர்ச்சுனா

5 months ago
in அரசியல், செய்திகள்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை நேற்று சனிக்கிழமை(28) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழரின் அரசியலில் இந்தியா இன்று நேற்று அல்ல 1970, 60களில் இருந்தே முக்கிய காரணியாக இருந்திருக்கின்றது. பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அமைச்சருக்கு மேலதிகமாக கட்டாயமாக நான் பேசுவேன். சட்டங்களை இயற்றக்கூடிய பெரும்பான்மை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது.

எங்களது கடல் எல்லைகளை பாதுகாப்பது தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கான வலு தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை இருப்பதன் காரணமாக இந்த விடயம் அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்து போகுமா என்பது கேள்விக்குறி.

ஆனால், யாழ்ப்பாண மீனவர்களை பொறுத்த வரைக்கும் இது ஒரு வாழ்வாதார பிரச்சனை ; இந்திய அரசாங்கத்துடன் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் கருத்துக்களை முன்வைப்பேன் ; இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதுடன் கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சரும் எம்மக்களின் வாக்குகள் மூலமே தேசியப்பட்டியல் மூலம் பாரளுமன்றம் சென்றவர்.

எனவே இப் பிரச்சனையை உனடியாக தீர்க்கவேண்டிய பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது- என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்
செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவின் நோய்க்கு மருந்தே கிடையாது என சபையில் கொந்தளித்த சந்திரசேகர்

June 5, 2025
நிலவின் வட பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்
செய்திகள்

நிலவின் வட பகுதியில் தரையிறங்கும் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம்

June 5, 2025
Next Post
வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.