சாவகச்சேரி-புளோலி (B-075) பிரதான சாலையின் புனரமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ள ஒரு
வேப்பமரம் மற்றும் ஒரு கொண்டல் மரத்தை உடனடியாக அகற்றுவதற்கும், சாலை வளைவை
சீரமைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமரிடம்,சரசாலை வடக்கு சனசமூக
நிலையத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
அது குறித்து பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
சாலையின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், கிராம அலுவலர் பிரிவு TU-317-
க்கு முன்பாக அமைந்துள்ள ஒரு வேப்பமரமும் ஒரு கொண்டல் மரமும், சாலை புனரமைப்புப் பணிக்கு ஒரு
குறிப்பிடத்தக்க இடையூறாக இருப்பதோடு, எதிர்காலச் சாலைப் பாதுகாப்பிற்குப் பெரும் கவலையையும்
ஏற்படுத்தியுள்ளன.
இந்த மரங்களின் வேர்கள் எதிர்காலத்தில் சாலையின் அஸ்திவாரத்தைச் சேதப்படுத்தி, விரிசல்களையும்
கட்டமைப்புச் சிதைவையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்பது
அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.








