Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி அநுர எனது பாதையில் பயணிக்கிறார்; ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

ஜனாதிபதி அநுர எனது பாதையில் பயணிக்கிறார்; ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

5 months ago
in செய்திகள்

நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும், நான் ஆரம்பிக்கவிருந்த அபிவிருத்திகளையும் முன்கொண்டு செல்ல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

அதனை அவர், தனது உத்தியோகபூர்வ முதலாவது வெளிநாட்டுப் பயணமான இந்திய விஜயத்தின்போது வெளிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் நலன் கருதிய அநுரகுமாரவின் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அவரும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையச் செயற்படுவார் என்றும் நான் நம்புகின்றேன்.

இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை முழுமையாகத் தீர வேண்டும். அபிவிருத்தி முழுமை பெற வேண்டும். அதன்பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது சுலபமாக இருக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்ததன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது. அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் அநுரகுமார வழங்கிய சகல வாக்குறுதிகளையும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் அவர் மீது முழு நம்பிக்கை இலங்கை மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்
உலக செய்திகள்

சவூதி அரேபியாவில் 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

June 2, 2025
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்
செய்திகள்

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தலும் நீதிகோரிய ஆர்ப்பாட்டமும்

June 2, 2025
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

June 2, 2025
கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது
செய்திகள்

கடந்த நான்கு மாதங்களில் முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது

June 2, 2025
ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
உலக செய்திகள்

ஜெனிவாவில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

June 2, 2025
யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்ற விஷமிகள்
செய்திகள்

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்ற விஷமிகள்

June 2, 2025
Next Post
இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு

இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களின் ஒளி விழா நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.