முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட ஆகியோர், அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யோசித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னகொட ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கில் ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான், குறித்த இருவரும் அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டார்.








