Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

கிராம உத்தியோகத்தருக்கு சமூக வலைத்தளத்தில் அவதூறு; யூடியூபருக்கு எதிராக கிரானில் போராட்டம் (காணொளி)

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரான் பிரதேச செயலகத்திறகுட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அரசேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு பறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் கிராமசேவகருக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (30) கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இவ் போராட்டத்தில் பூலாக்காடு,பெரியவேரம்,வட்டிபோட்ட மடு,அம்புஸ்குடா,ஆனசுட்ட பொத்தானை மற்றும் பொண்டுகள்சேனை,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கு பற்றியிருந்தனர்.

கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் ஏந்திய பதாதைகளை சுமந்தபடி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக பிரதேச செயலக முன்வாயிலை வந்தடைந்தனர்.

‘தூண்டாதே.தூண்டாதே வன் முறையை தூண்டாதே ‘ நீதி வேண்டும் நீதி வேண்டும் கிராமசேவகருக்கு நீதி வேண்டும்.’ ‘நிறுத்துங்கள் நிறுத்துங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்வதை நிறுத்துங்கள்,’ ‘பொய்யான தகவல்களை வெளியிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்பன போன்ற கோஷங்களை இதன்போது எழுப்பினார்கள்.

பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் 3 கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கையளித்தனர்.

கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்டவர் உரிய நடவடிக்கைக்கைக்காக பிரதேச செயலாரிடம் கையளிப்பதாக இதன்போது தெரிவித்தார்.

தங்களது கிராமத்தில் இயங்கும் மாதர் சங்க பிரதிநிதிகள் பல வருட காலமாக இவ் அமைப்பில் இயங்கி வருவதாகவும் இவர்கள் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அரச சொத்துக்களை தாங்கள் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன் சில நாட்களாக கிராம உத்தியோகத்தரை மானபங்கப்படுத்தும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இவர்களை விசாரணைக்குட்படுத்துவதோடு, இவர்களிடமுள்ள அரச சொத்துக்களை பறிமுதல் செய்து புதிய மாதர் சங்கத்தினை அமைத்து தருவதுடன், எமது கிராம சேவகர் எவ்வித இலஞ்சம் ஊழலும் புரியாதவர் என்பதுடன் எமது கிராமத்தில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்களை எவ்வித இடையூறுமின்றி அச்சுறுத்தலின்றி கடையாற்ற வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதேசமயம் கடந்த வாரம் ‘யூ ரியுப்’ வலைத்தல நபர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்று மாதர் சங்க உறுப்பினர்களினை செவ்வி கண்டு அங்கு கடையாற்றும் கிராம சேவகருக்கு எதிரான பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இச் செயலானது பிரதேசத்தில் அமைதியின்மையும், அசாதாரண சூழ் நிலையையும் ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் அங்கு கடையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களிடையே அதிருப்தி இன்மை நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #batticaloa #npp #srilanka #viral #kiran

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கறுவா பயிர் செய்கையை மேம்படுத்த அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.