Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரகலய போராட்ட மக்களை கொலை செய்ய நான் விரும்பவில்லை; முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா

அரகலய போராட்ட மக்களை கொலை செய்ய நான் விரும்பவில்லை; முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா

1 year ago
in செய்திகள்

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என முன்னாள் இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் 2022 அரகலய உட்பட தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

2022 உள்நாட்டு குழப்பம் எனது இராணுவ வாழ்க்கையின் மிகவும் குழப்பமான ஒரு தருணம் அது எனது உண்மையான நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது. என தெரிவித்துள்ள அவர் தேசத்திற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஆபத்து ஏற்பட்டால் தேசத்தை பாதுகாப்பதற்காக தயாராகயிருக்கும் உத்தியோகபூர்வ இராணுவமே தேசத்தின் இராணுவம் என அவர் தெரிவித்துள்ளார்.

2022 எழுச்சி ஒரு உள்நாட்டு பொது அமைதியின்மை ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக்குறைந்த பலத்தையே பயன்படுத்துமாறு நான் இராணுவீரர்களிற்கு உத்தரவிட்டேன், இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தினால் பொதுமக்களில் ஒருவர் கூட உயிரிழப்பதை நான் விரும்பவில்லை என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயுதமேந்தா பொதுமக்களை எனது அதிகாரத்தை பயன்படுத்தி படுகொலை செய்யும் ஒருவனாக நான் மாறவிரும்பவில்லை, அதன் காரணமாக நாடு குழப்பத்தில் சிக்கவில்லை, அயல்நாடுகளில் பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக கையாளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான விளைவுகள் இதற்கு சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அவர் தனக்கு தனிப்பட்ட நோக்கங்கள் இருந்தாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார்.

அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்கள் கூறுவது போல அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் என்ற மோசமான நோக்கம் என்னிடம் இல்லை, வெளிநாடொன்றின் சதுரங்க காயாக மாறவேண்டும் அல்லது வெளிநாட்டு தூதரகத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கவேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்த சுங்கம்

1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்த சுங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.