Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

ஒரே இரவில் கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ள துறைமுக அதிகார சபை

5 months ago
in செய்திகள்

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை பிரதேச செயலகத்தில் இன்று (03) இடம்பெற்ற திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முத்துநகர் பகுதியில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதோடு விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். கிட்டத்தட்ட 1887 ஏக்கருக்கு க்கு மேற்பட்ட குடியிருப்பு காணியில் இவர்கள் வசித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையினர் ஒரு இரவிலேயே கல்லுப் போட்டு 5226 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 1971ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே முத்துநகர் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கான ஆதாரங்கள் உட்பட ஆவணங்களும் மக்களிடம் இருக்கின்றன.

எனவே அவர்களுடைய காணி விடுவிப்பு தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் அக்மீமன மற்றும் அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏழை மக்களின் காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வெல்வெரி மக்களுடைய காணிகளையும் விடுவித்து தற்போது இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களையும் அங்கே மீளகுடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்வெரி பகுதியில் மக்கள் வாழ்ந்த வீடுகள், உடைந்த கட்டடங்கள் கிணறுகள், பலன்தரு மரங்கள் இன்னும் அங்கே இருக்கின்றன.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை வரவேண்டாம் என்று கூறிவிட்டு அந்த காணிகளை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாம் ஏனைய காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.

எனவே இவற்றையும் விடுவிக்க இந்த அவையினூடாக கோரிக்கை விடுப்பதாகவும் மக்ஹெய்சர் விளையாட்டரங்கு புணரைப்பு, திருகோணமலை வைத்தியசாலையின் பௌதீகவள பற்றாக்குறை மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

June 6, 2025
அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது
செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனப் பெண் கைது

June 5, 2025
பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்
செய்திகள்

பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக மாற்றி விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம்

June 5, 2025
Next Post
கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.