மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் சென்ற சுமார் 300 மியான்மார், ரோஹிங்கியா அகதிகளை அந் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு மற்றும் குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாதுகாப்புப் படையினர், தங்கள் கடல் எல்லைக்கு அப்பால் அவற்றை அனுப்பிவைத்தனர்.