அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன்19 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 204 கிராம் 660 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








