கொழும்பு 09 பகுதியில் உள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் இருந்தபோது, கட்டிடத்தின் திறந்திருந்த பகுதியொன்றின் ஊடாக கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








