Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி விமர்சனம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி விமர்சனம்

1 year ago
in செய்திகள்

இலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையை மக்கள் போராட்ட முன்னணி விமர்சித்துள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத்திற்கு மக்கள் போராட்ட முன்னணி இன்று(06) அனுப்பிய கடிதத்திலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த மாதளமளவில் கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமை, நாட்டின் பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாடு மற்றும் நாடு மக்களின் இறையாண்மை ஆகியவற்றை பாதிக்கும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்னர் அது தொடர்பில் முக்கிய மீளாய்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முன்னணியால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தகவல்களை நம்பியிருக்கும் சகாப்தத்தில் நாம் தற்போது இருப்பதால், நாடு மக்களின் விபரங்களை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது ஆபத்தானது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் தந்திரோபாய நடவடிக்கை என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணி, இலங்கை மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேவேளை, புதிய தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் எனவும் மக்கள் போராட்ட முன்னணியினர் கடிதத்தின் மூலம் விளக்கியுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது
செய்திகள்

பலாலி கடலில் அம்மன் சிலையொன்று கரையொதுங்கியுள்ளது

July 3, 2026
ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!
உலக செய்திகள்

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!

July 3, 2026
வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!

July 3, 2026
ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

July 3, 2026
நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!

July 3, 2026
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி

July 3, 2026
Next Post
திருகோணமலையில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது

திருகோணமலையில் சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.