Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விட்ஸ் கார் தொடர்பிலும் பொய் கூறி வாக்குப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி;கேள்வி எழுப்புகிறார் வசந்த யாப்பா

விட்ஸ் கார் தொடர்பிலும் பொய் கூறி வாக்குப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி;கேள்வி எழுப்புகிறார் வசந்த யாப்பா

1 year ago
in செய்திகள்

சமகால அரசாங்கம் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியின் காரணமாக சாதாரண மக்கள் அதனை கொள்வனவு செய்ய முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் 12 லட்சம் ரூபாய் விட்ஸ் காரை வாங்க முடியுமா என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகேவிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

12 லட்சம் ரூபாய்க்கு ஒரு விட்ஸ் காரை வாங்க முடியும் என நளின் ஹேவகே தேர்தல் பிரசார மேடையில் குறிப்பிட்டிருந்தார். அதனை நம்பிய மக்கள், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வசந்த யாப்ப பண்டார இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில், ஜப்பானிய விட்ஸ் வகை காரை இலங்கைக்கு 12 லட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் எனவும் அது இறக்குமதி செய்யப்பட்டால், அனைவரும் அதை வாங்க முடியும் என்றும் நலின் ஹேவகே தெரிவித்திருந்தார்.

எனினும் அந்த வாகனங்களுக்கு அரசாங்கம் சுமார் 70 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை வரி வசூலிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினாலேயே மக்களால் வாகனங்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சார மேடைகளில் தங்கள் ஆட்சியில் பெற்றோல் உட்பட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என தெரிவித்து இருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின் முன்னைய அரசாங்கம் போலவே தேசிய மக்கள் சக்தியும் செயற்படுவதாக மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
Next Post
சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.