Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்றைய ஹர்த்தால் சொல்லும் செய்தி என்ன?

நேற்றைய ஹர்த்தால் சொல்லும் செய்தி என்ன?

2 years ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் விடுத்த ஹர்த்தால், கடையடைப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பின் இயல்பு நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றே கூறலாம்.

யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் எனப் பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. மருந்துக்கடைகள், சாப்பாட்டுக்கடைகள் தவிர ஏனையகடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. தனியார் போக்குவரத்து நடை பெறவில்லை. இ.போ.ச இயங்கியது, பயணிகள் குறைந்தளவிலேயே இருந்தனர். பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்தது. “சர்வதேசமே எமக்காக குரல் கொடு” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்னால் ஆரம்பமான பேரணி மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. கிழக்கில் திரு கோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்கள் வழமைபோல் இயங்கின.ஹர்த்தால், கடையடைப்பு என்பன அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் சமிக்ஞையாகும். அரசாங்கத்துக்கு எதிராக வடக்கும் கிழக்கும் கைகோர்த்து தமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டவில்லை. இப்படியான எதிர்ப்பைக் காட்டுவதற்கு வடக்கும் கிழக்கும் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியம்.

தொடர்புடையசெய்திகள்

யாழில் கடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது
செய்திகள்

யாழில் கடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது

May 17, 2025
உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

May 17, 2025
மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று
செய்திகள்

மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

May 17, 2025
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்
அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

May 17, 2025
அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்
செய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

May 17, 2025
தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
Next Post
திருமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்!

திருமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.