யாழ்ப்பாணம் நவாலியில் கடையை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நவாலி பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தேர்தலுக்கு முதல் நாள் இரவு கடையை உடைத்து சிசிடிவி கமரா மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.