மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா நேற்று தினம்
(02) மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
சிறுவர் நூலக தலைவர். திருமதி கந்தசாமி நிர்மலாதேவி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கௌரவ அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவு சங்கத்தின் தவிசாளர் மே.வினோராஜ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அதிதிகள், சிறுவர்களின் பாண்டு வாத்திய கருவிகள் இசையுடன் வரவேற்கப்பட்டதுடன் , மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு உரை என்பன ஆரம்ப நிகழ்வாக நடைபெற்றதை தொடர்ந்து அதிதிகளால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சு. சுபராஜன் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் அலுவலக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.குகநேசன், மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாலர்பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் சு.நிதர்சோன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் க.பிரியதர்சினி மற்றும் மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர் அருள்ராசா போன்ற சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.