Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்க பாலம்; இந்தியாவின் உப மாநிலமாக மாறப்போகும் இலங்கை!

இந்தியாவையும்-இலங்கையையும் இணைக்க பாலம்; இந்தியாவின் உப மாநிலமாக மாறப்போகும் இலங்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையைமாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது என பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தி ஜீவிகள் ஒன்றியத்தின் தலைவருமான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்தி ஜீவிகள் பங்கேற்கும் ஊடகசந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில்
கலந்துகொண்டு இவ்வாறு கூறிய பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவிக்கையில்- இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது.

இலங்கையின் தேவைப்பாட்டுக்காகவன்றி, இந்தியாவின் தேவைப்பாட்டுக்கு ஏற்பவே இந்த பால
நிர்மாண விடயம் கையாளப்படுகிறது. இதனால் இலங்கையின் நலன்களை விட இந்தியா வின் நலன்களே மேலோங்கும்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 6.7 வீதமானோர் தொழிலற்று இருக்கின்றனர். நாளாந்தம் வேலை
வாய்ப்பை இழக்கும் தொகை அதிகரித்து வருகிறது.2022 இறுதியில் 5.5 மில்லியன் மக்கள் புதிதாக வறுமைக்குட்பட்டுள் ளனர். இது 27.4 வீதமாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பொருளாதாரம் சரியான நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. ஜனாதிபதி இதற்குண்டான தேவைப் பாடுகளை பூர்த்தி செய்வதாக புலப்படவில்லை.

அஸ்வெசும பெறச் சென்று உயிரிழக்கின்றனர். ஜீவனோபாயத்தை நடத்த தேவையான ஒழுங்கில் பொருளாதார வளர்ச்சி நாட்டில் நடைபெறுவதாக இல்லை. அதிகாரத்தை பெறும் நோக்கிலான பொறுப்பற்ற விதமாக அரசியல் விளையாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் மொட்டுக் கட்சியும் ஈடுபட்டுள்ளன.பொருளாதாரத்துக்கு தீர்வாக அதானி போன்ற சர்வதேச மட்டத்தில்
வட்டிக்கு பணம் வழங்குநர்களிடம் தேசிய வளங்களை விற்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளது.

சர்வதேச நாடுகளின் அதிகார போட்டியில் இலங்கை சிக்கியுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறான செயற்பாட்டையே ஜனாதிபதி மேற் கொள்கிறார். கல்விச் சீர்திருத்தம் தேவை என்றாலும், கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய தேசிய முன்னுரிமை வழங்கப்படுகிறது.தொடர்ச்சியாக தேர்தலை காலம் தாழ்த்தி, சர்வ கட்சி மாநாட்டை நடத்தி, மக்களையும் சர்வதேச தலைவர்களையும் இந்தியாவையும் ஏமாற்றும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெட்கமின்றி ஈடுபட்டு வருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையேனும் நடத்துமாறு இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு தெரிவித்தமை இலங்கையின் நன்மதிப்புக்கே களங்கம் ஏற்படுத்தியுள்ளது.நாடும் நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்த போக்கில் நாட்டின் பொருளாதார மீட்சி இடம்பெறுவதாக இல்லை. அதற்கான உண்மையானகாரண காரிய செயற்பாட்டிலான பிரவேசத்துக்கு செல்வதாக இல்லை. பொருளாதார மீட்சிக்கு தேசிய வளங்களை விற்பது தீர்வாகாது நாடுகளுக்கு ஏலம் விடுவதும் தீர்வாகாது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்
செய்திகள்

முகக்கவசத்துக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும்; தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்

June 9, 2025
17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை
அரசியல்

17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் குறுக்கே எவரும் வர வேண்டாம்; சுமந்திரன் எச்சரிக்கை

June 9, 2025
வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது
செய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது

June 9, 2025
தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மஹிந்தானந்த மேன்முறையீடு
செய்திகள்

தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மஹிந்தானந்த மேன்முறையீடு

June 9, 2025
Next Post
இந்திய தூதருக்கும்- தமிழ் கட்சிகளுக்குமிடையே முக்கிய சந்திப்பு!

இந்திய தூதருக்கும்- தமிழ் கட்சிகளுக்குமிடையே முக்கிய சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.