கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (23) கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீட்டிலிருந்து குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை பரிசோதித்தபோது, சடலத்திற்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், இதன் காரணமாக மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கும், சம்பவத்தின் பின்னணி குறித்து தெளிவுபடுத்துவதற்கும் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








