நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரமும் தேவைப்படுவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்கள் இருந்த போதிலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களும் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு நல்ல ஓர் கலாசாரத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.