திருகோணமலை முகாமடி கடல் பிரதேசத்தில் மீனவர் ஒருவர் கடல் அலையில் அடித்து சொல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
53 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மீனவர், மீனவ படகை, கரையிலிருந்து கடலுக்கு தள்ளிவிடும்போது, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.
இந்நிலையில் அவரை பாதுகாப்பு பிரிவினர், பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீட்டபோதும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மீனவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.