குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (7) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
புத்தளம்- 55ஆம் கட்டையில் உள்ள தொடருந்து கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ள காரணத்தினாலேயே குறித்த வீதி மூடப்படவுள்ளது.
தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி மீண்டும் மூடப்படும்.
நேற்றைய தினமும் திருத்தப்பணிகளினால் இந்த வீதி மூடப்பட்டது. இந்த நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைத்து கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.