ஜூலை 23 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதியில் 36 நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களான தந்தை மற்றும் மகன் இருவரை பங்களாதேஷ் மீனவர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
அவர்கள் மஹேஷ்காலி கடற்கரைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் தெவிநுவரைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதான எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடலில் 36 நாட்கள் மீன்களை உண்டு உயிர் தப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இலங்கை அதிகாரிகளுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.







