பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் கிழக்குமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன உட்பட 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எதிர்வரும் 12 திகதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-329.png)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.