மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி, குருக்கள் மடம் பகுதியில் இன்று (09) நண்பகல் விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பக்கமிருந்து, கல்முனை பக்கம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும், கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-351.png)
இப்பாரிய விபத்துச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதுடன், முச்சக்கரவண்டியில் பணயம் செய்த இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார், விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.