யாழ்.பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் பின்னர், முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் வருட மாணவர்கள் குழுக்களுக்கிடையில் நேற்று (09) மாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-359.png)
இதில் இரு மாணவர்கள் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.